தமிழகத்துக்கு பெருமை சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஏ.ஆர். லட்சுமணன்,78 உடல்நல குறைவால் காலமானார்.
பெருமை சேர்த்தவர்:
ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கையில் உள்ள தேவகோட்டையில் 22 மார்ச் மாதம் அன்று பிறந்தார். இவர் இளங்கலை மற்றும் முதுகலை சட்டம் படித்து உள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்று, சிறப்பாக பணியாற்றினார். பின், 2006-2009 நடப்பாண்டில் இந்தியா சட்ட ஆணையத்தின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார்.
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!
இவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். மாசு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை விதித்தார். இதன் மூலமாக பலரது கவனத்தை பெற்றார். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் இருந்த நீதிபதி இவர் தான்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். பலரும் இவருக்கு இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
கவிதை வாயிலாக இரங்கல் :
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளார். வைரமுத்து தனது கவிதையில் அவருடன் இருந்த நினைவுகளை கூர்ந்துள்ளார். வைரமுத்துவின் புத்தகமான “கருவாச்சி காவியம்” பதிப்பின் முதல் பிரதியை பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தின் நெடுந்தூண் என்றும் புகழ்ந்துள்ளார்.
நீதியரசர்
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!நீதிமன்றத்தின்
நெடுந்தூண் சாய்ந்ததே!தமிழர்களின்
இந்திய அடையாளம் அழிவுற்றதே!கலைஞர் வெளியிடக்
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!அனைவர்க்கும்
என் அழுகை இரங்கல்.— வைரமுத்து (@Vairamuthu) August 27, 2020
அதே போல் அரசியல் பிரமுகரான பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னாருக்கு இரங்கல் செலுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) August 27, 2020
ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.