சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக திமுக கட்சியின் சார்பில் சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளது, கட்சியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஜெ. அன்பழகன் மரணம்:
சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக, திமுக கட்சின் ஜெ. அன்பழகன் இருந்தார். இந்த கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றினார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொண்டார், ஆனால், துரதிஷ்டவசமாக கொரோனாவால் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உயிரிழந்தார். அதனால், அவரது பதவிக்கு பலரும் கடுமையாக போட்டியிட்டனர்.
சிற்றரசு நியமனம்:
இப்படியாக சூழ்நிலை இருக்க யாரும் எதிர்பாராவண்ணம் அக்கட்சின் நிர்வாகம் சிற்றரசு என்பவரை நியமித்துள்ளது. கட்சியில் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் சீனியர்கள் என்று பலர் இருக்க, இவரை கட்சி நிர்வாகம் நியமித்துள்ளது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அதிருப்தி அடைத்துள்ளனர்.
பாரதிய ஜனதாவில் இணக்கம்:
இதற்கிடையில், சென்னை மாவட்டத்தின் 1000 விளக்கு பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் தலைமை செயலர் ஆன கு.க. செல்வம் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – ஊரடங்கு எதிரொலி!!
கூடுதலாக அவர், பாரதிய ஜனதா கட்சியில் சேர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில், இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணையவுள்ளார்.