கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசித்து வரும் ஜோடி தான் லோகநாயகி, மாதேஷ். இதில் லோகநாயகி கருவுற்ற நிலையில், இருவரும் இயற்கை முறையில் தான் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஏற்கனவே பேசி வைத்துள்ளனர். இந்நிலையில் லோகநாயகிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கணவர் மாதேஷ் YouTube யை பார்த்து தன் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் அவருக்கு நல்லபடியாக ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரசவத்திற்கு பின் லோகநாயகிக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவர் மயக்கமடைந்துள்ளார். உடனே பதறியடித்துக்கொண்டு கணவர் மாதேஷ் லோகநாயகியை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லோகநாயகி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.