கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மதுரையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை காலை 4 மணி வரை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி நாளை கரூர், தர்மபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.