இன்று வானிலை கூறியிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் பரவலாக 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளது.
பரவலாக மழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இப்படி மழை பெய்கிறது. அதிலும், காலையில் வெப்பமாகவும், இரவில் மழையும் பெய்து ஒரு வித்தியாசமான பருவநிலை உள்ளது. மழை பெய்யாத இடங்களில் வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
எங்கு எங்கு மழை:
ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!
இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது ” சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. பெரம்பலூர், அரியலூர், மதுரை மற்றும் திண்டுக்கல், சிவகங்கை, தேனீ, விருதுநகர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பம் குறைந்த பட்சமாக 30 டிகிரி மேல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.