கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.39-க்கு ‘பேவிபிராவிர்’ மாத்திரை – ஜென்பர்க் நிறுவனம் அறிமுகம்..!

0

இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தி பேவிபிராவிர் மாத்திரைகளை தயாரித்து சந்தையிட கிளென்மார்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பேவிபிராவிர் மாத்திரை..!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தி பேவிபிராவிர் மாத்திரைகளை தயாரித்து சந்தையிட மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கிளென்மார்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 150 நோயாளிகளுக்கு தந்து இந்த மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பரிசோதனையின் போது வழக்கமான ஆதரவு பராமரிப்புடன் 14 நாட்கள் வரையில் பேவிபிராவிர் மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் கட்ட சோதனையில் முதன்மை செயல்திறன் முடிவு மேம்பாடுகளை காட்டி இருக்கிறது. மேலும் இந்த மாத்திரைகள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!

இந்நிலையில் மாத்திரை பேவிவென்ட் பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த மாத்திரையின் விலை 39 ரூபாய் என்ற ஜென்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரின்டன் நிறுவனம் இதே மாத்திரையை பேவின்டன் பிராண்ட் பெயரில் அதிகபட்சமாக 59 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்திருந்தது. கிளென்மார்க் நிறுவனம் பேபிஃப்ளூ என்ற பிராண்ட் பெயரில் ஒரு மாத்திரையை 75 ரூபாய்க்கு விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here