நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் குறித்து சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
பத்து தல
நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் பத்து தல. இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், நடிகை ப்ரியா பவானி சங்கர், தான்யா, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்’. மேலும் படு ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது படத்தின் புரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் பிசியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் பேசியதாவது, இயக்குனர் கிருஷ்ணா பத்து தல படத்தில் நடித்த அனைத்து கேரக்டருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
சொல்ல போனால் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் தான் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே போல் நான் நடித்த இந்த பத்து தல படத்திலும் எல்லா நடிகர்களுக்கும் சமனான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படமும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். அவரின் எதிர்பார்ப்பை பத்து தல படம் பூர்த்தி செய்யுமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்,.