குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4
விஜய் டிவி தொலைக்காட்சியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக விளங்கும் குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜே விஷால், விசித்ரா, காளையன், ஷெரின், ஆண்டி, ராஜ் ஐயப்பா, சிவாங்கி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் குக்குகளாக களம் இறங்கினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற Immunity டாஸ்கில் ஆண்ட்ரியான் வெற்றி பெற்று Immunity கைப்பற்றி எலிமினேஷன் ரவுண்டில் இருந்து தப்பித்தார். அதுமட்டுமின்றி இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதி கட்டத்தில் இருந்தனர்.
பத்து தல படத்துல பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!
இந்த நிலையில் இந்த இருவரில் யார் வெளியேற போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எலிமினேஷன் ரவுண்டில் ஷெரினை விட ராஜ் அய்யப்பா குறைவான மதிப்பெண் பெற்றதால் இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறுவதை தாங்க முடியாமல் கோமாளிகளான புகழ், சுனிதா கண் கலங்கி நின்றனர். எலிமினேட் குறித்து பேசிய ராஜ் அய்யப்பா, வைல்ட் கார்ட் சுற்றில் திரும்பவும் வருவேன் என்று கூறி விடை பெற்று சென்றார்.