அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்தை குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வாரிசு – துணிவு:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர்கள் தான் நடிகர் விஜய் – அஜித். தற்போது விஜய் நடிப்பில் வாரிசும், அஜித் நடிப்பில் துணிவும் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படங்கள் ஒரே நாளில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இப்படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய் மற்றும் அஜித் இருவரும் பெரிய மாஸ் ஹீரோக்கள். அவர்கள் படம் ஒரே நாளில் வெளியாவதால், தியேட்டர்கள் வாரிசுக்கு 50% மற்றும் துணிவுக்கு 50% என பிரிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் தெலுங்கில் வாரிசு திரைப்பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவில் வாரிசு படம் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டார் . மேலும் தெலுங்கு தயாரிப்பாளர் விஜய்க்கு அதிக சம்பளம் கொடுத்ததால், இனி வரப்போகும் காலங்களில் தமிழ் தயாரிப்பாளர்கள் அல்லோல பட போகிறார்கள் என்பதை நினைக்கும் போதே வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.