எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து வாசுவும் இப்போது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.
எதிர்நீச்சல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனனி வீட்டிற்குள் வந்ததிலிருந்து பட்டம்மாள் பாட்டி குணசேகரன் உட்பட அனைவரையும் ஆட்டி படைத்து வருகிறார். இதனால் நேற்றைய எபிசோடில் குணசேகரின் அம்மா குணசேகரனுக்கு எதிராக எதுவும் செய்ய கூடாது என வீட்டில் உள்ள அனைவரிடமும் பால் மீது அடித்து சத்தியம் வாங்குகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவரது தம்பிகள் அனைவரும் சத்தியம் செய்ய மருமகளை சத்தியம் செய்ய கூப்பிடுகிறார். ஆனால் அவர்கள் சத்தியம் பண்ண மறுத்துவிட்டனர். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஜனனி வீட்டிற்குள் வந்ததையடுத்து வாசுவும் வீட்டிற்குள் வருகிறார். இதை பார்த்த குணசேகரனும் அவரது தம்பிகளும் மிகுந்த கோபத்துடன் வெளியில் அனுப்ப திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் குணசேகரன் அம்மா வாசுவிடம் நீதான் கல்யாணத்தை நிறுத்துவதற்கு பிளான் போட்டு கொடுத்த அப்படின்னு கேட்கிறார்.
மண்டையை உடைத்த ஹேமா மீது உச்சகட்ட காண்டில் வெண்பா.,தலையில் கட்டுடன் செய்த காரியம்!!
அதற்கு வாசுவும் நான் தான் கல்யாணத்தை நிறுத்த ஜனனி கிட்ட சொன்னேன் என்கிறார். ஆனால் எனக்கு இந்த விஷயத்தை சொன்னது யாரு? என நந்தினி ரேணுகாவை பார்க்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் வாசு இவர்கள் தான் கல்யாண விஷயத்தை சொன்னார் என குணசேகரனிடம் மாட்டி விடுவார் என தெரிகிறது. இதை தெரிந்து கொள்ளும் குணசேகரன் என்ன முடிவு எடுப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.