தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது விரைவில் வலுவடைந்து புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3 நாட்களுக்கு (ஜூன் 12 வரை) மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் – தேர்வை ரத்து செய்து முதல்வர் உத்தரவு..!
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.