டிக்டாகில் இளைஞனை ஏமாற்றிய இளம்பெண் – 97 ஆயிரம் வரை மோசடி..!

0
tiktok
tiktok

மதுரையில் டிக்டாக் மூலம் சுமார் ரூ.97,000-ம் பணத்தை இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் பறிகொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டிக்டாக் மோசடி

மதுரையில் எலிஸ் நகரை சேர்ந்த ஐ.டி ஊழியரான ராமசந்திரன் என்பவர் சமூகவலைத்தளத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சசி என்ற பெண் டிக்டாக் மூலம் அவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இளம் பெண் சசியிடம் ராமசந்திரன் நட்புக் கொண்டு பேசி வந்துள்ளார்.இந்தநிலையில் வீட்டு வாடகை தர வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி ராமசந்திரனிடம் சசி அடிக்கடி பணம் கேட்டு உள்ளார். ராமசந்திரனும் கேட்டும் போதெல்லாம் பணத்தை கொடுத்துள்ளார். சுமார் ரூ.97,000-ம் பணத்தை ராமசந்திரன் சசியிடம் பறிகொடுத்துள்ளார்.

கேரளாவில் மற்றுமொரு யானை பலி – மலப்புரம் அருகே பரபரப்பு..!

tik tok fraud
tik tok fraud

சில நாட்களுக்கு பின்னர் சசி தனது வலைதள கணக்குகளை முடக்கிவிட்டு தலைமறைவான பின்னரே தான் ஏமாற்றப்பட்டுள்ளதை ராமசந்திரன் உணர்ந்துள்ளார். இதுதொடர்பாக ராமசந்திரன் அளித்த புகாரின் பெயரில் எஸ்.எஸ்.காலணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here