கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது ரசிகர்களை திடுக்கிட செய்யும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அனைத்து சீரியல்களும் முடக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இந்த டிவியில் ஒளிபரப்பான அனைத்து சீரியல்களும் ரீசண்டாக ஆரம்பித்த சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஃபேமஸான சில்லுனு ஒரு காதல் சீரியல் எந்த காரணம் இன்றி நிறுத்தப்பட்டது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவர் இவர் தானா?? அடக்கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா என்ற இரண்டு சீரியல்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற எல்லா சீரியல்களும் நிறுத்தப்போவதாக கலர்ஸ் தமிழ் நிறுவனம் பிளான் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வள்ளி திருமணம், கண்ட நாள் முதல், மந்திரப்புன்னகை, பச்சைக்கிளி என்ற சீரியல்களை நிறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு வாரத்தில் அனைத்து சீரியல்களும் ஒன் பை ஒன்றாக நிறுத்தப்பட்டு, புது சீரியல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட அனைத்து குடும்ப பெண்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.