விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், மயூ கோபியிடம் நான் உங்களை டாடி என்று கூப்பிடவா? என கேட்க, அவர் ஓகே சொல்கிறார். இதையடுத்து மயூ, கோபியை டாடி, டாடி என கூப்பிட அவருக்கு இனியா நியாபகம் வந்துவிட்டது. இதையடுத்து கோபிக்கு தூக்கம் வரவில்லை, ராதிகா என்னாச்சு என கேட்க எனக்கு இனியா நியாபகம் வந்துருச்சு, என்னோட பொண்ணு மட்டும் என்கிட்ட வந்துட்டா நான் ஹேப்பியா இருப்பேன் என சொல்லி வருத்தப்படுகிறார். இனியா என்னிடம் ஒரு நாள் வருவாள், அப்படி வந்தால் நீ அவளை பார்த்து கொள்வாயா? என ராதிகாவிடம் கேட்க அவர் பார்த்து கொள்வேன் என சொல்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இன்னொரு பக்கம் இனியா ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடக்க உள்ளது, அதற்கு பாக்கியா மீட்டிங்கில் எப்படி பேச வேண்டும் என்பதை கண்ணாடி முன்னாடி நின்று பேசி பார்க்கிறார். இதை பார்த்து இனியா பீல் செய்கிறார். மறுபுறம் ராதிகா, கோபியை மயூ ஸ்கூல் மீட்டிங்கிற்கு அழைக்க அவர் வர மறுக்கிறார். ஏன் என ராதிகா கேட்க நான் எப்போதும் அந்த ஸ்கூல் மீட்டிங்கிற்கு இனியா அப்பாவா தான் போய் இருக்கேன்,இப்போ மயூ அப்பாவா போக கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது என சொல்கிறார்.
அதற்கு ராதிகா இத்தனை நாள் நான் சிங்கள் பேரண்டாக தான் ஸ்கூல் மீட்டிங் அட்டன் செய்து இருக்கிறேன் என பில் பண்ணி பேச கோபி மீட்டிங்கிற்கு வர ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து பாக்கியா, இனியா ஸ்கூலுக்கு சென்றுவிட்டனர். அப்போது இனியா தோழிகள் உங்க அப்பா வரலையா? என கேட்க, இல்லை என இனியா சொல்கிறார். அந்த சமயம் மயூ ராதிகாவுடன் கோபி மீட்டிங்கிற்கு வர, இனியா தோழிகள் பல விதமாக கேள்வி கேட்கின்றனர். இதையடுத்து இனியாவுக்கு பயங்கரமாக கோபம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.