இந்திய அணி டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு இந்த இரண்டு வழிகள் மட்டும் தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி20 உலக கோப்பை 2022:
டி20 உலக கோப்பை தொடரின் 8வது சீசன் ஆஸ்திரேலியாவில் அரையிறுதி நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 4 போட்டிகள் முடிவில் தலா 5 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. மீதமுள்ள ஒரு போட்டியின் முடிவில் தான் எந்த 2 அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும் என தெளிவாக தெரியும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதே போல, குரூப் 2வில் உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளது. ஆனாலும், அரையிறுதிக்குள் உறுதியாக நுழைந்தது என்று கூற முடியாது. அதாவது, இன்று நடைபெற இருக்கும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் மற்றும் வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்.
இவ்வாறு, நடந்தால் இந்திய அணி முதலிரண்டு இடங்களை தக்க வைத்துக் கொள்வதுடன் அரையிறுதிக்கு நுழைவது உறுதியாகி விடும். மேலும், ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் நுழைவது உறுதியாகும். குரூப் 2 விற்கான கடைசி போட்டிகள் அனைத்தும், வரும் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் முடிவில், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றி தெளிவாக தெரிந்து விடும்.