தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதையும், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில், அடுத்த மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் முழுமூச்சில் தயாராகி வருகின்றனர். பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்களும் தீவிரமாக இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி, மக்களின் இயல்பு பணி முடங்கியுள்ளது. இந்த கனமழை தாக்கத்தினை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் தங்கள் மாவட்டங்களுக்கு விடுமுறைகளை அறிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், விழுப்புரம், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இது போக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கம்போல் இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.