18 ஆண்டு திருமண வாழ்க்கையை சில மாதங்களுக்கு முன்பு முறித்து கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது
தனுஷ்-ஐஸ்வர்யா:
சினிமா துறையில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது பரவலாக பேசப்பட்டு வந்தது. 18 வருடங்கள் நன்றாக வாழ்ந்திருந்த இந்த தம்பதிகள் எப்படி பிரிந்தார்கள் என்று ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என பதிவில் கூறியிருந்தனர். இதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி இருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்ததாகவும், அவை சக்ஸஸ் ஆகவில்லை என்றும் தகவல் தெரிவிக்கிறது.
காதலில் விழுந்தாரா ஈரமான ரோஜாவே கேபி.., அதுவும் இந்த பிரபலத்துடனா?? அவர்களே வெளியிட்ட பதிவு!!
இதையடுத்து இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, தங்கள் குழந்தைகளுக்காக விவாகரத்து முடிவை மாற்றி கொண்டு, சேர்ந்து வாழ போவதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சரியான முடிவு எடுத்து உள்ளீர்கள் என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.