பண்டிகை காலங்களில், பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில், பகல் நேரத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை:
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்கள் பெரும்பாலும் போக்குவரத்து சேவை பயன்படுத்துகின்றனர். சமீப தினங்களாக, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளதால் சாமானியர்களுக்கு இது குதிரை கொம்பாகிவிட்டது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் பெரும்பாலானோர், ரயிலில் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வரும் பயணிகளுக்காக முத்துநகர், அனந்தபுரி, பாண்டியன், வைகை, பொதிகை உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முடிந்து விட்டது.
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனிமேல் இதெல்லாம் பண்ணவே முடியாது!!
இந்த நிலையில், மதுரை வழியாக இரட்டை ரயில் பாதை வசதி இருப்பதால் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பகலில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வேவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபோல, தேஜஸ் போன்ற இடை நில்லா ரயில்களை அதிக படுத்த வேண்டும் எனவும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை இன்னும் கூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டால், பயணிகளை நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்பதில் மாற்றமில்லை.