‘நடிகர்களின் ஆசைக்கு இணங்காததால் பட வாய்ப்பு கிடைக்கல’ – பிரபல நடிகை அளித்த பகீர் தகவல்!

0

உலக நாயகன் கமல்ஹாசன் 10 அவதாரங்களில் நடித்து வசூல் ரீதியாக சாதனை படைத்த படமான தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் நடிகை மல்லிகா ஷெராவத். அதற்கு பிறகு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் மல்லிகா ஷெராவத் நடிக்காமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜாக்கிச்சான் உடன் தி மித் என்கிற படத்தில் நிர்வாணமாக நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் தற்போது ஆர்.கே/ஆர்.கே என்கிற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத் பெரிய தகவலை தெரிவித்துள்ளார்.

நடிகை மல்லிகா ஷெராவத் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியதாவது, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்த போதிலும், சிலரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என்று கூறினார். நடிகைகள் என்றால் இப்படி தான் இருக்கனும், அவர்கள் சொல் பேச்சை கேட்டு நடக்கணும் அப்படி நடக்கவில்லை என்றால் படத்தில் இருந்து தூக்கிவிடுவார்கள். ஏனென்றால் சினிமா துறை அந்த அளவுக்கு அழுக்கு படிந்து உள்ளது என்று கூறினார். அவரின் இந்த பேச்சு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here