தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கடுத்து ஊரடங்கை தளர்த்துவது அல்லது நீட்டிப்பது குறித்து மே 30ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை 17,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 127 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 மருத்துவர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவ தேர்வாணையத்தின் பதிவு செய்துள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடப்பட உள்ளது. மருத்துவர்களை தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் மூலம் நியமிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. தேர்வாகும் மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் தேவைப்பட்டால் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |