தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்..!

0

உலகில் பேரழிவை ஏற்படுத்தும் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இது உணவு பயிர்களை நாசப்படுத்தி உணவு தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும். தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது.

வெட்டுக்கிளிகள்

தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் தற்போது இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன.

அங்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் இந்த வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியாவிற்கு படையெடுக்கும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக வேளாண்துறை

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவை பொறுத்த வரையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை.

எனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. வெட்டுக்கிளி நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.” இவ்வாறு வேளாண்துறை விளக்கமளித்துள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here