தமிழ் திரையுலகில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி இயக்குனர் சசியின் இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதன் 2ஆம் உருவாக உள்ளது.
விஜய் ஆன்டனி
இசைப்பாளரான விஜய் ஆன்டனி பல படங்களில் இசைமைத்ததோட நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாத்துரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் 2016-ல் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. நாயகியாக சட்னா டைட்டஸ் நடித்து இருந்தார். சசி இயக்கினார்.
பிச்சைக்காரன் 2
இந்த பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது.எனவே இதன் 2ஆம் பக்கம் உருவாக உள்ளது. மேலும் இதன் கதையை விஜய் ஆன்டனி எழுதுகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது “நான் கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறேன். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை. மேலும் ஊரடங்கில் புதிய எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தும் முறை மற்றும் சினிமா சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்று வருகிறேன். ஊரடங்கினால் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்தேன்.” என்று கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |