தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது எனவும் சென்னைக்கு எவ்வித தளர்வுகளும் வழங்கக்கூடாது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவக்குழு ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருவதால் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று காணொளி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது, ரயில் மற்றும் விமானத்தை தொடர்ந்து பேருந்து பொதுப்போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு தான் முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பதால் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது எனவும் சென்னைக்கு எவ்வித தளர்வுகளும் வழங்கக்கூடாது என மருத்துவக்குழு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |