கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏப்ரலிலும், தங்கத்தின் ஏற்றுமதி 100 சதவீதம் அளவிற்கு சரிவைக் கண்டு உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க ஏற்றுமதி:
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே தங்கத்தின் இறக்குமதி தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 21.37 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே தங்க இறக்குமதி நடைபெற்று உள்ளது. இது சென்ற ஆண்டுகள் ஒப்பிடுகையில் 100 சதவீதம் குறைவாகும், அதாவது சென்ற ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 29,974 கோடி ரூபாய்க்கு தங்க இறக்குமதி நடைபெற்றது. உலகளவில் தங்க இறக்குமதியில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவில், ஒரு ஆண்டுக்கு 800 முதல் 900 டன் அளவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்து வருவதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை இடைவெளி பெருமளவு குறைந்து உள்ளது. அதாவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.16 லட்சம் கோடியாக இருந்த பற்றாக்குறை, இந்த வருட ஏப்ரல் மாதத்தில் 51,340 கோடியாக குறைந்து உள்ளது. நாட்டில் தங்கம் மட்டுமில்லாமல் ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் துறையும் 98.74% குறைந்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |