இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 1ம் தேதியுடன் தினமும் நாடு முழுவதும் 200 பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை என்பது ரயில்வே துறை வெளியிட்ட அட்டவணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
பயணியர் ரயில்கள்:
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்தை கொண்டது இந்திய நாடு. தினமும் நாடு முழுவதும் 12,000 ரயில்கள் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் விதிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இது முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்கள் பல்வேறு விதிகளுடன் டெல்லியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் இதனை தினமும் 200 ரயில்களாக அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளாக இருக்கும். இந்த ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் ரயில்களின் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்திற்கு எந்த ரயில் சேவையும் அறிவிக்கப்படவில்லை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |