கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ காதல் குறும்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
காதல் குறும்படம்:
காதல் திரைப்படங்கள் எடுப்பதில் மிகவும் கைதேர்ந்த இயக்குனர் கவுதம் மேனன் (GVM). இவரின் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் இதற்கு சிறப்பான உதாரணம். இந்த படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் சென்று விட்டாலும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ளது. இதில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அதற்காக கவுதம் மேனன் எழுதிய கதையில் ஒரு பகுதியை மட்டும் குறும்படமாக எடுத்து வெளியிட்டு உள்ளார்.
12 நிமிடத்தில், மனதை உருக்கும் வசனங்களுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் வெளியாகி உள்ள குறும்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் சிம்பு, த்ரிஷா இருவரும் செல்போனில் உரையாடுவது போன்று காட்சி அமைந்துள்ளது. இந்த கதைக்கான வசனத்தை கேட்டவுடன் சிம்புவே அழுது விட்டாராம். அந்த அளவுக்கு கவுதம் மேனன் வசனங்களை செதுக்கி உள்ளார்.
இந்த குறும்படத்தால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை கவுதம் மேனன் அதிகரிக்க செய்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் பின்னணி இசையுடன், விழிப்புணர்வு வாசகங்களும் கலந்து ஒவ்வொரு காட்சியையும் வீட்டில் இருந்து வீடியோ கால் மூலம் கவுதம் மேனன் இயக்கி உள்ளார். இந்த குறும்படம் தற்போது வைராகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |