தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிப் பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஊரடங்கு காரணத்தால் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சொந்த ஊரில் இருப்பதால் அவர்களை அழைத்து வரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.
இதனால் தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியர்களும், நிபுணர்களும் கோரி வருகின்றனர். மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை தேர்வெழுத வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் இன்று கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அமைச்சர் செங்கோட்டையன். இதற்கு பின்னர் முதல்வரை சந்திக்க உள்ளார். இதில் தேர்வினை ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |