விண்ணைத்தாண்டி வருவாயா 2 – கவுதம் மேனனுக்கு ஓகே சொன்ன சிம்பு..!

0

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா:

2010ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு – திரிஷா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதலை வேறொரு கோணத்தில் விவரிக்கும் இந்தப்படம் காதலர்கள் மட்டுமின்றி அனைவர் மனதையும் கவர்ந்தது. இதில் வரும் பாடல்கள், வசனங்கள், கதை இன்றளவும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. இந்நிலையில் இதன் 2ம் பாகத்திற்கான கதையை கவுதம் மேனன் எழுதி முடித்துள்ளார்.

கவுதம் மேனன் அவர் அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தியதால் விடிவி 2ம் பாகத்தை கிடப்பில் போட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விழிப்புணர்விற்காக அந்த கதையில் இருந்து ஒரு பாகத்தை மட்டும் எடுத்து வெளியிட்டு இருந்தார். அதில் சிம்புவும், திரிஷாவும் மொபைலில் உரையாடுவது போன்று அமைந்திருந்தது. அதனை வீட்டில் இருந்தே கவுதம் மேனன் இயக்கி இருந்தார்.

இந்த குடும்பத்திற்கான வசனத்தை சிம்பு படித்ததும் கண் கலங்கி விட்டாராம். இதனால் கவுதம் மேனனிடம் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தே ஆக வேண்டும் என கூறியுள்ளார் சிம்பு. அதற்காக ஷூட்டிங் தேதிகளை எப்போது வேண்டுமானாலும் ஒதுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here