செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2 ம் பாகம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் :
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் செல்வராகவன். சமீபத்தில் இவர் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக பரவலான வசூலை பெற்றது. தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர் பல வெற்றி படங்களை இயக்கியிருந்தாலும், இளைஞர்கள் அனைவருக்கும் பிடித்த திரைப்படம் என்றால் அது 7ஜி ரெயின்போ காலனி தான். இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா அற்புதமாக வடிவமைத்திருப்பார். இந்நிலையை இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கல்யாணத்துக்குப் பின் சரிந்த நயனின் மார்க்கெட்., இதை சமாளிக்க தான் இப்படி ஒரு பிட்ட போட்டாரா?
அதாவது சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஏவிஎம் ரத்தினம் கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர் நான் தயாரித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது