![தமிழக மகளிர்க்கு குட் நியூஸ்., உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் ரெடி! அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ்!! தமிழக மகளிர்க்கு குட் நியூஸ்., உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் ரெடி! அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ்!!](https://enewz.in/wp-content/uploads/2022/12/rs-fet-2-696x522.jpg)
தமிழக மகளிருக்கு உரிமை தொகையான ரூ.1000 வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் 85% நிறைவடைந்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு :
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது, இது குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதாவது மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டம் சார்ந்த கணக்கெடுப்பு பணிகள் 85% நிறைவடைந்துள்ளதாகவும், வரும் 2023 மாநில பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கல்யாணத்துக்குப் பின் சரிந்த நயனின் மார்க்கெட்., இதை சமாளிக்க தான் இப்படி ஒரு பிட்ட போட்டாரா?
பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவிக்கலாமா? என்பது குறித்து அறிவிப்பை முதல்வர் தான் வெளியிடுவார் என்றும் நிதி அமைச்சர் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் இந்த தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.