ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாள் இவை என்பதால் நிறுவனங்களுக்கு சம்பளம் தொடர்பான சேவைககளில் இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
பேச்சுவார்த்தை தோல்வி..!
இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததால் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
பட்ஜெட் நாள்..!
ஜனவரி 31 வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 1 சனிக்கிழமை உடன் பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் விடுமுறை என மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் இது வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அதே நாளில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
என்னென்ன கோரிக்கைகள்??
- 12.25 சதவீத சம்பள உயர்வு
- வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு
- அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள்
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
இந்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் வங்கித்துறை வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |