Saturday, May 11, 2024

ஊரடங்கு காலத்தில் 25 லட்சம் வழக்குகள் ஆன்லைனில் விசாரணை – சட்டத்துறை அமைச்சர் தகவல்!!

Must Read

கொரோன பொது முடக்க காலத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் வழக்குகள் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

கொரோனா காலம்:

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. அதே போல் நீதிமன்றங்களும் செயல்படாமல் இருந்தன. ஆனால், சிறிது நாட்களுக்கு பிறகு காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து வழக்குகளும் காணொளி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்திய சட்டத்துறை சார்பில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாந்த் வெளியிட்டார். அதில் கூறப்பட்டதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டு தொலைபேசி வாயிலாக சட்ட சேவைகள் வழங்க ஒரு திட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலமாக 3.44 லட்சம் இலவச சட்ட ஆலோசனைகள் எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன”

மொத்தமாக விசாரிக்கப்பட்ட வழக்குகள்:

அதனால் காணொளி காட்சியாக தான் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தற்போது வரை 25 லட்சம் வழக்குகள் இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. அதில் 9000 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சட்டத்துறை அமைச்சர்கள் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது, “அனைத்து மக்களுக்கும் எளிமையான வழியிலும், ஏற்கக்கூடிய கட்டணத்தில் நீதி கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -