தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி – திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்ட தேர்வுத்துறை!!
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களான காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேதப்பட்டை பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ, சென்னையில் உள்ள பெரம்பலூர் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக அரியலூர், காவேரிப்பாக்கம், பச்சப்பேட்டை பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு அக்டோபர் 20 ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.