கொரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் ஆகிய பங்குகளின் மதிப்பு சரிந்ததால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீதான முதலீடுகள் அதிகரித்து, அதன் தேவை பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக தங்க நகை விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். டிசம்பர் மாத தொடக்கத்தில் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகள்!!
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.97 உயர்ந்து ரூ.4,733க்கும், ஒரு சவரன் 776 ரூபாய் அதிகரித்து ரூ.37,864க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.69.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.