அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி..!

0

கொரோனா தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகம் முழுவதும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 457 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் ருத்ரதாண்டவம்..!

கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா வந்தது 30,000 ரேபிட் டெஸ்ட் கிட் – விரைவில் தீவிர சோதனை தொடங்கும்..!

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பரவியுள்ளது நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here