சீனாவின் உகான் நகரில் இருந்து உலக நாடுகள் முழுவதுக்கும் பரவி பெரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் இன்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் புதிதாக 941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்த நிலையில்183 பேர் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து கொரோனா மருத்துவ உபகரணங்கள்
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் டெல்லியில் மத்திய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் அவர்கள் கூறியதாவது; மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டன என கூறப்பட்டது.இதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வர காலதாமதம் ஏற்பட்டது. சீனாவில் இருந்து 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மருத்துவ பொருட்கள் வழங்குவதற்காக ‘மேக் இன் இந்தியா’ இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் 325 மாவட்டங்களில் இதுவரை எந்த கொரோனா வைரஸ் பாதிப்பும் பதிவாகவில்லை. இதுவரை நடத்தப்பட்ட 2,90,401 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.ஏப்ரல் 15 அன்று மட்டும் 30,043 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து விரைவான ஆன்டிபாடி சோதனைக் கருவிகள் உட்பட 5 லட்சம் சோதனை கருவிகளை இந்தியா பெற்றுள்ளது. விரைவான கொரோனா சோதனைக் கருவிகள் சீனாவிலிருந்து ஆரம்பகால நோயறிதலுக்காக அல்ல, தொற்றுநோயியல் நோக்கத்திற்காக மட்டுமே வாங்கப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தேசிய போலியோ கண்காணிப்பு நெட்வொர்க் குழுவின் சேவைகளைப் பயன்படுத்தி எங்கள் தற்போதைய கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி
சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |