ஏப்ரல் 17 இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்த தகவல் 6 மாவட்ட மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை ?
சித்திரை வெயில் ஆரம்பமாகிவிட்டது எனவே எல்லா மாவட்டங்களிழும் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மாலையில் வெப்பநிலை குறைந்து வருகிறது. சேலம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. காற்றின் ஈரப்பதம் குறைந்து அதிகரித்த புழுக்கம் மாலை வரை இருந்து வருகிறது. மக்களை மகிழ்விக்கும் வகையில் வானிலை மையம் ஒரு அறிவிப்பு அறிவித்துள்ளது,என்னவென்றால்
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |