கொரோனா வைரஸ் என்னும் நோயால் மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.உயிர்கொல்லியின் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
75000 பேருக்கு அமேசானில் வேலை:
கொரோனவால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார்கள்.அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு கூறி வருகிறது.இருந்தாலும் சிலர் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்,ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக கிளையை மூடியது.
பலர் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். எனவே தேவை அதிகரித்ததால் வரும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இன்னும் பல ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணியமர்த்தவுள்ளது,ஆன்லைன் விற்பனையில் பல ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.அமேசான் நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சம் பணியாளர்களை பணியில் அமர்த்தியது. தற்போது மேலும் 75,000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது,
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்த தொழிலாளர்களை தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |