பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நயன்தாராவை எங்காவது பார்த்தால் கண்டிப்பாக இதைச் செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா..!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நயன்தார முதலில் சிம்புவை காதலித்தார் அவர்கள் இருவரும் நெருக்கமான போட்டோஸ் அவ்வப்போது வெளியாகின. பின்னர் தீடிரென இருவருக்கிடையே காதல் முறிந்தது.
பிரபுதேவாவுடன் காதல்..!
பின்னர் பிரபுதேவாவுடன் காதல் கொண்டார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இருந்தும் இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர். பின்னர் பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவை, பிரபுதேவா திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.
பிரபுதேவா முன்னாள் மனைவி..!
இந்நிலையில், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரபுதேவா நயன்தாராவை காதலிக்கிறார் என்பதை அப்போது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் நேர்மையான கணவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களை கவனித்து வருகிறார்.
நயன்தாராவை உதைப்பேன்..!
சமீபத்தில் பிரபுதேவா எங்களுக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது அவர் மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். நயன்தாரா பற்றி கூறும்போது அவர் என் கணவரை திருடிவிட்டார். மற்றவர்களின் கணவரைத் திருடும் பெண்களும் தண்டிக்கப்பட வேண்டும். நடிகை நயன்தாராவை நான் எங்காவது பார்த்தால் உதைப்பேன் அவர் ஒரு தவறான பெண் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |