தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் – இன்று மாலை அட்டவணை வெளியீடு!!

0

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை வெளியிட உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தை போல் கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய பகுதியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இதற்காக அனைத்து மாநிலத்திலும் தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தேர்தல் நடத்துவது குறித்த பாதுகாப்பு நடவடிக்கை உட்பட அனைத்து தேர்தல் பணிகளையும் மிக சிறப்பான முறையில் விரைவாக தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் பதட்டமான சூழ்நிலை நிலவும் வாக்குச்சாவடி பகுதி போன்ற தகவலையும் கேட்டறிந்ததார். இதனை தொடர்ந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும்.

விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அதிரடி!!

மேலும் அசாம் பகுதியில் இரண்டு கட்டமாகவும், மேற்கு வங்க பகுதியில் ஏழு கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்க பகுதியில் அதிகமான பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகள் உள்ளது. இதன் காரணமாகவே கடந்த 2011ம் மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஆறு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அங்கு மீண்டும் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதால் தேர்தல் ஆணையர் தனது வருத்தத்தை தெரிவித்தார். தற்போது தேர்தல் அட்டவணையை இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here