மும்பை பங்கு சந்தை தற்போது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தொடங்கும் பொழுதே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது.
பங்குச்சந்தை:
இந்த மாதம் தொடக்கத்தில் பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் அபார வளர்ச்சியை அடைந்தது. அதன் பின்பு அடுத்த சில நாட்களாகவே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை கண்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சியை அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவித்திருந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இன்று மும்பை பந்துசந்தையில் 1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை 1600 புள்ளிகள் சரிந்து 49,986 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது.
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் – இன்று மாலை அட்டவணை வெளியீடு!!
மேலும் தேசிய பங்குச்சந்தை நீஃப்டி 300 புள்ளிகளுக்கு அதிகமாக குறைந்து வர்த்தகமாகிவருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302 புள்ளிகள் சரிந்து 14,795 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தற்போது பங்குச்சந்தை இந்த சரிவை கண்டதற்கு காரணம் ஆசிய பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு என்று கூறி வருகின்றனர்.