இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – அனைவர்க்கும் Work From Home!! அரசு அதிரடி!!

0

கடந்த மாதம் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக புனே மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மக்கள் வாழும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில் நாளை மற்றும் மறுநாள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதை கருத்தில் கொண்டு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் பணிபுரிபவர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிகமாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை கருத்தில் கொண்டு அம்மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் நாளை மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here