சண்டிகர் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உறவுக்கார வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் கற்பமானதை அடுத்து அவருக்கு கட்டாய கருச்சிதைவு செய்த உறவினர்களை போலீசார் கைது செய்தனர்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்:
சண்டிகர் மாநிலத்தில் உள்ள பெல்காம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது உறவினரான 18 வயது வாலிபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அவர் இந்த வாலிபரால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து அவர் கர்ப்பமும் அடைந்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் கர்ப்பம் அடைந்ததை அறிந்த அந்த வாலிபரின் தாய், தாத்தா மற்றும் தந்தை மூவரும் அந்த பெண்ணிற்கு கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கருவினை கலைத்துள்ளனர். உறவினர் வீட்டில் இருந்ததால் அந்த பெண்ணின் தாயாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த விவகாரம் தெரியவில்லை.
போலீசில் புகார்:
சில நாட்களுக்கு முன் இந்த உறவினர் வீட்டிற்கு சென்ற தாயாரிடம் இந்த 13 வயது சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால் கோபமடைந்த அவரது தாயார் காவல் நிலையத்தில் இந்த வார திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.
ராயல் என்பீல்ட்க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டா CB 350 – கவலையில் RE கிளாசிக் ரசிகர்கள்!!
இவர் அளித்துள்ள புகாரை அடுத்து போலீசார் வாலிபர், அவரது தாய், தந்தை மற்றும் தாத்தா ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் கீழ் உள்ள சட்டப்பிரிவுகளான 376 (பாலியல் வன்கொடுமை) 313 (பெண் அனுமதியின்றி கருச்சிதைவு) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.