உங்கள் முகம் கண்ணாடி போல ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!!

0
potato facial
potato facial

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் உருளை கிழங்கும் ஒன்று. இதில் சுலபமாக பல ஸ்னாக்ஸ் வகைகளை செய்து விடலாம். இந்த உருளை கிழங்கு ஸ்னாக்ஸ் செய்ய மட்டும் பயன்படுவது அல்ல. இது முக அழகையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பொழுது உருளைக்கிழங்கை வைத்து முக பொலிவை எப்படி அதிகரிப்பது என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு

  • உருளைக்கிழங்கு சருமத்தில் ஏற்படும் வறட்சி, கருவளையம், முக கருமை, எண்ணெய் சருமம் அனைத்திற்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
potato facial
potato facial
  • கரு வளையத்திற்கு உருளைக் கிழங்கை வட்டமாக நறுக்கி அதனை குளிர்ந்த நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்பொழுது அதனை கண்களில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கண்களில் இருக்கும் கரு வளையம் இருந்த இடமே தெரியாமல் போய் விடும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

  • ஒரு சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே கருமையாக காட்சியளிக்கும். இதற்கு முதலில் உருளை கிழங்கை அரைத்து அதில் சாறு எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சை சாற்றில் நனைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கும்.
 potato facial
potato facial
  • உருளைக் கிழங்கை அரைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவினால் மேக்கப் போடாமலே முகம் ஜொலி ஜொலிக்கும்.
  • மேலும் உருளைக் கிழங்கு சாறுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும்.
  • உருளைக் கிழங்கை அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து கட்டியானதும் அதனை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இறந்த செல்கள் வெளியேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here