இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 125 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் 31 வரை விடுமுறை:
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் ஒரு இடத்தில் கூடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது 11 மட்டும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் 10ம் வகுப்பிற்கும் வரும் மார்ச் 29ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு விளக்கமளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |