தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் இன்று புதிதாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கூடுதல் மருத்துவர்கள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் மட்டும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த காரணங்களால் அங்கு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு கொரோனா நோயாளிகள் கிடுகிடுவென அதிகரித்து வரும் வேளையில் சிகிச்சை அளிக்க தேவையான அளவு மருத்துவர்கள் இலலாமல் பற்றாக்குறை நிலவுகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!
எனவே முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த 1000 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இறுதித் தேர்வை இன்னும் எழுதி முடிக்காத (கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால்) நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.