நாடெங்கிலும் கொரோனா தற்போது தலைவிரித்தாடி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குணமடைபபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அன்பழகன்
குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ அன்பழகன் மூச்சு திணறலுடம் அனுமதிக்கப்பட்டார். சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர். தற்போது நிலவரப்படி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்தது. அதாவது அவரின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 1000 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு
நேற்று அவருக்கு 80% வென்டிலேட்டர் தேவைப்பட்ட நிலையில் இன்று 67% மட்டுமே தேவை படுகிறது. அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடிகிறது, இவ்வாறு மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டது.