சொமோட்டா ஊழியரால் பெண் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை முடிவு! ஊழியருக்கு குவியும் ஆதரவு!!

0
zomato

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் சொமோட்டா ஊழியர் தன்னை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையின் முடிவில் சொமோட்டா ஊழியருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.

சொமோட்டா ஊழியர் விவகாரம்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சொமோட்டா ஊழியர் ஒருவர் தன்னை தாக்கியதாகவும், அதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் பதிவிட்டிருந்தார். இளம்பெண்ணின் பரபரப்பான வீடியோ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வீடியோ தொடர்பான விசாரணையில் சொமோட்டா ஊழியர் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சொமோட்டா ஊழியர் தெரிவிக்கையில், உணவை ஆர்டர் செய்துவிட்டு ரத்து செய்ததாகவும், வாங்கிய உணவுக்கு பணம் தராமல் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

‘அறைக்குள் சென்று அழுதேன்’ – கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா உருக்கம்!!

அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தில், அந்த இளம்பெண் சொமோட்டா ஊழியரை செருப்பால் அடித்ததாகவும், அதை தடுக்க சென்றபோது தான் கையில் இருந்த மோதிரம் இடித்து அந்த பெண்ணின் மூக்கு உடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சொமோட்டா ஊழியருக்கு தங்களது ஆதரவை வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதை ட்விட்டரில் #men too என்ற பெயரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here