இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான “சோமேட்டோ” ஒரு நிமிடத்திற்கு 22 சிக்கன் பிரியாணிகளை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. நாட்டில் மக்கள் அதிகமாக விரும்பும் ஸ்வீட்டாக குலாப் ஜாமுன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் டெலிவரி:
இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சோமேட்டோ நிறுவனம் அறிமுகமானது. ஆன்லைன் மூலம் நமக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து நாம் இருக்கும் இடத்திலேயே உணவுகளை பெற்று கொள்ளலாம். இந்த ஆண்டில் இந்திய மக்கள் எதனை அதிகமாக விரும்பி உண்டனர் என்பது குறித்த தகவல்களை சோமேட்டோ வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 22 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்த ஆண்டு வெஜிடபிள் பிரியாணிக்கு என்று 19.8 லட்சம் ஆர்டர்கள் பெறபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த மே மாதம் 4.5 லட்சம் பிஸ்ஸாகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது கடந்த நவம்பர் மாதம் 7.5 லட்சமாக உயர்ந்துள்ளது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புனேவில் மட்டும் 25 லட்சம் மோமோ வகைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பெங்களூரு குடிருப்பாளர் ஒரு நாளைக்கு நான்கு முறை என்று ஒரு ஆண்டிற்கு 1,380 ஆர்டர்களை செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 1,99,950 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மிக குறைந்த ஆர்டராக 10 ரூபாய்க்கு ஒரு உணவு பொருள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
‘சென்னையில் முக்கிய மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும்’ – காவல்துறை அறிவிப்பு!!
நாட்டில் மக்களுக்கு மிக விருப்பமான ஸ்வீட்டாக குலாப் ஜாமுன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குலாப் ஜாமூனை மட்டும் தீபாவளி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்டர் செய்துள்ளனர்.
இதில் மும்பை நகரவாசிகள் தான் முதல் இடம் பிடித்துள்ளனர். டெலிவரி செய்பவர்களுக்கு மும்பை நகரவாசிகள் அதிகமாக டிப்ஸ் கொடுக்கின்றனர். அவர்கள் கொடுத்த மொத்த டிப்ஸ் எண்ணிக்கை மட்டும் 4.6 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சுவாரஸ்ய ரிப்போர்ட் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.