“love today” பாணியில் மணப்பெண்ணிடம் போனை மாற்றிய இளைஞர்.., போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!!

0
“love today” பாணியில் மணப்பெண்ணிடம் போனை மாற்றிய இளைஞர்.., போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!!
“love today” பாணியில் மணப்பெண்ணிடம் போனை மாற்றிய இளைஞர்.., போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!!

லவ் பட பாணியில் சேலத்தைச் சேர்ந்த நபர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் போனை மாற்றி சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லவ் டுடே திரைப்படம்:

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சிறு வயதிலேயே காதலித்து வாழ்க்கையை பற்றி நூல் அளவு கூட தெரியாமல் திருமணம் செய்து, கடைசியில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றன. இது போன்ற சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடந்து வருகிறது. தற்போது இருக்கும் 2K கிட்ஸ் லவ்வை அப்படியே வெளிச்சம் போட்டு காமித்த திரைப்படம் என்றால் அது லவ் டுடே திரைப்படம் தான். அப்படத்தில் காதலன் காதலி இருவரும் தனது மொபைல் போனை மாற்றிக் கொண்டதால் ஏற்படும் விளைவுகளை காட்டி இருப்பார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த படத்தில் நடந்த சம்பவத்தை போல சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சேலம் மாவட்டத்தில் இருக்கும் வாழப்பாடி பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து லவ் டுடே பட பாணியில் தனது மொபைல் போனை நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த மொபைலை செக் செய்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு வீடியோ இருந்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் சிறுமி ஒருவரின் அரை நிர்வாண வீடியோ ஒன்று மணப்பெண்ணிடம் சிக்கி உள்ளது.

ஏய்.., இந்தாடா உன் பணம், வெளியே போ.., கோபி மூஞ்சியில் கரியை பூசிய பாக்கியா.., பக்கபலமாக இருந்த தொழிலதிபர்!!

அதை வீடியோவை பார்த்த பெண் அப்படியே காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.  இதுகுறித்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இது போன்ற அரை நிர்வாண வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிவித்து அரவிந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரவிந்தை காவல்துறை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது போல் வேறு சில பெண்களையும் அவர் வீடியோ எடுத்து உள்ளாரா??  என்பதை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here